mercredi 22 mai 2013

வடக்கில் தேர்தல் நடத்தக்கூடாது என்று பௌத்த பயங்கரவாத அமைப்பு பொதுபல சேனா கூறியுள்ளது.


bbsராஜபக்ச குடும்பத்தினரால் அன்னிய சக்திகளின் ஆதரவோடு தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு வடக்கில் தேர்தல் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் வடக்கில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு காலை இழந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி பெண் சாதனை!

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா என்ற இந்திய பெண்

அருணிமா சின்கா (வயது 25), உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். கூடைப்பந்து வீராங்கணையான அருணிமா, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டது. இதில் அவர் தனது இடது காலை இழந்தார்.

ஒரு காலுடன் தத்தித் தத்தி நடந்த அவர் மீது அவரது குடும்பத்தார் மிகவும் இரக்கம் காட்டினர். இதனால் கூனிக் குறுகிப்போன அவர், தன் வாழ்நாளில் எதாவது சாதனை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்ட அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று விரும்பினார். குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அவரது முயற்சிக்கு மூத்த சகோதரரும், பயிற்சியாளரும் ஊக்கம் கொடுத்தனர் அதன் பின்னர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, இன்று காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார்.

மட்டக்களப்பின் மட்டுஒளி தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது.


மட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கலை,கலாசார நிகழ்வுகள்,நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தமிழ் தொலைக்காட்சிகள் இலங்கையில் உள்ளபோதும் மட்டக்களப்பின் நிகழ்வுகள் பெரும்பாலும் இருட்டடிக்கப்பட்டே வந்திருக்கின்றது.
இந்நிலையில் உலகலாவிய ரீதியிலும் வடக்கின் அனைத்துப்பகுதியிலும் தமது சேவையை மேற்கொண்டுவரும் டான் தொலைக்காட்சி சேவை நிலையம் இந்த மட்டுஒளி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.
ஆஸ்க் கேபிள் விசனின் ஒரு அங்கமாகவுள்ள மட்டுஒளியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. ஆஸ்க் கேபிள் விசனின் தலைவர் குகநாதன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்பவிழாவில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ,  மற்றும் படை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆஸ்க் கேபிள் விசனின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன.
ஆஸ்க் கேபிள் விசன் இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஊடக அமைச்சு, தகவல் திணைக்களம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டு கேபிள் மூலமாக இதனை பயன்பெறும் வகையில் ஒழுங்கமைத்துள்ளதாக அதன் ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மக்கள் கடந்த காலங்களில் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த சேவையை இங்கு ஆரம்பித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கேபிள் தொலைக்காட்சி சேவையூடாக இந்த மட்டுஒளியை கண்டுகளிக்கலாம் என தெரிவித்த தலைவர், தற்போது மட்டக்களப்பு நகரம் மற்றும் இருதயபுரம் தொடக்கம் முகத்துவாரம் பகுதியான அனைத்துப்பகுதிகளிலும் மற்றும் கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளிலும் இதன் சேவைகள் வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
தற்போது கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையூடாக இதன் இணைப்பு வேலைகள் இடம்பெற்றுவருகின்றன. களுதாவளை வரையில் இதன் இணைப்பு சேவை கல்லாறில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமைபெறுமிடத்து அப்பகுதியில் உள்ள அனைவரும் கேபிள் சேவை ஊடாக மட்டு.ஒளியை கண்டுகளிக்கலாம் என ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பான சேவைகளை பெறவிரும்புவோர் எமது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த அவர் தங்களது பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுஒளியில் காண விரும்பினால் அலுவலகத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் எமது செய்தியாளர்கள் அந்த நிகழ்வை பதிவுசெய்து ஒளிபரப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏலத்தில் காந்தியின் இரத்தம் விலைபோகவில்லை

ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்கும் படம் £25க்கு விலைபோனது  .மகாத்மா காந்தியின் கடைசி உயில் 55,000 ஸ்டெர்லிங் பவுண்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.காந்தியின் இரத்த மாதிரி உட்பட அவரது நினைவுப் பொருட்களாக இருக்கும் சுமார் 50 பொருட்களில் இந்த இரு பக்க ஆவணமும் அடங்குகிறது.காந்தியால் குஜராத் மொழியில் கையெழுத்திடப்பட்ட அந்த உயிலின் ஆரம்ப விலையாக 30,000 முதல் 40, 000 ஸ்டெர்லிங் பவுண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அவரது மிதியடி ஒன்று 19,000 பவுண்களுக்கு விற்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அது £9,000 அதிகமாகும்.
அவருக்கு 1920களில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஆப்பன்டிக்ஸ் அறுவைச் சிகிச்சையின்போது கிடைத்த ஒரு அவரது இரத்த மாதிரி விற்பனையாகவில்லை என்று அவற்றை ஏலத்தில் விட்ட முல்லொக் ஏல விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
1932இல் காந்தியை பயங்கரவாதியாக அறிவித்த அபூர்வமான பிரிட்டிஷ் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று £260க்கு விற்பனையானது.

ஸ்ரீபெரும்புதூரில் வைத்து ராஜீவ் காந்தி படுகொலை குறித்து அதிர்ச்சி தகவல்

                                                                                                                                                                                                                

mardi 21 mai 2013

விலை கொடுத்து விடுதலை வாங்க முடியாது. தயவுசெய்து சீமான் போன்ற நபர்களுக்குப் பணம் அனுப்பி ஈழத்துக்குப் பாதை அமைக்கும் பணியினைச் செய்ய வேண்டாம் ;ஈழப் பித்தன்.

18-05-2013 சனிக்கிழமை கடலூரில் சிறப்பான ஓர் கூட்டத்தை நடத்தி ஈழத் தமிழ் இனத்தை மீழ முடியாத சிக்கலுக்குள் அமுக்கியுள்ளார் செந்தமிழன் சீமான். தயாரிப்பாளர்களுக்குக் கதை சொல்லி அவர்களை ஏமாற்றிப் படம் எடுத்து அதில் சம்பாதிப்பதை விடவும் அதே கதையை புலிகளுக்காக மேடையில் பேசினால் கோடிகளைச் சுருட்டலாம் என்று மிகவும் கால தாமதமாக ஈழத்துப் படகில் ஏறிய சீமான் தனது லட்சியத்தில் பாதியை எட்டிவிட்டார். மீதி இனி முதலமைச்சர் ஆவதுதான் பாக்கி!
ஓர் தொலைக்காட்சி நேர்க்காணலில் சூடேறிய சீமான், ' நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்குதானே கட்சியை ஆரம்பித்தீர்கள்?' என்ற கேள்விக்கு, ஆம் ஆட்;சியைப் பிடிப்பதற்குதான் கட்சியை ஆரம்பித்தேன் என்றார்.
தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் பயணம் செய்யும் பாதை ஈழத் தமிழர்களுடைய தோள்களாக உள்ளன. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைகளில் பல ஆயிரம் கோடிகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்ட சீமான் ஈழம் பற்றி அவர்களுக்கே பாடம் நடத்தப் புறப்பட்டார். கனடா போன்ற நாடுகளில் இவரது உரையை, வாடகைக்கு மண்டபம் எடுத்து சி.டி.யில் திரையிட்டு கேட்டு ரசித்து மகிழ்ந்தனர் விவரம் தெரியாத வசதியானவர்கள்.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை ஓரம்கட்டி வாய்வீச்சில் வல்லவராகிவிட்டார் சீமான்! தமிழ் நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து பல கோடிகளைச் சுருட்டியவர் இவர் மட்டுமே!
எங்காவது ஓர் மூலையில் மேடை அமைத்து முழங்கி விட்டு, அதை அப்படியே கனடா, நோர்வேக்கு அனுப்பி விடுவார். அங்கே இருப்பவர்கள் 'ஐயோ' என்று டாலர்களில் அனுப்பி வைத்தவர்கள் பல பேர்!
2013ல் எதை வைத்து கதை பேசுவது என்று தெரியாமல் 'தந்தி' தொலைக்காட்சிக்கு சிறப்பு நிருபராக சிறிது நாள் நடித்தார். இயக்கமும் நடிப்பும் அவரது தொழில் என்பதை வெளிநாடு வாழ் தமிழர்கள் மறந்துவிட்டனர் சில காலமாக!
ஏதாவது ஒர் புரட்சி பண்ணினால்தான் தனது போட்டியாளர்களை வீழ்த்தி முதலமைச்சர் நாற்காலி வரை செல்லலாம் என்று ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி தலைவரான, 'ஜாசின் மாலிக்' கை அழைத்து வந்து விட்டார் கடலூருக்கு. ஈழத் தமிழரது விடுதலைக்கு அவர் ஆதரவு வழங்குவார் என்று கூறினார் கூட்டத்தில்.
சீமானுக்குப் பெருமையோ பெருமை! மாலிக் ஆதரவு தருவதாகப் பேசிவிட்டார். ஆதலால் நோர்வே, கனாடாவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு கோடியாவது இந்த மாதத்துக்குள் வந்து சேர்ந்து விடும் என்று பொங்கி வழிந்து, செல்வச் செழிழப்பு தெரிந்தது அவரது முகத்தில்.
ஈழப் பிரச்சினையில் காஸ்மீர் பிரச்சினையைத் தொடர்பு படுத்தக் கூடாது என்று ஆரம்ப காலம் தொட்டே கவனமாக இருந்தனர் ஈழத் தமிழர்கள். வித்தியாசமாகப் படம் எடுக்கும் இயக்குனர்களின் படங்கள் போன்று, பின்விளைவு தெரியாமல் ஈழத்துப் பிரச்சினையுடன் காஸ்மீர் பிரச்சினையையும் கோர்த்துவிட்டார் சைமன்!
இந்தியா ஈழப்பிரச்சினையில் தயக்கம் காட்டியவற்றில் காஸ்மீர் பிரச்சினையும் ஒன்றாக இருந்தது. தனது புகழுக்காகவும் பணத்துக்காகவும் ஜாசீன் மாலிக்கை இழுத்து வந்து ஈழப்பிரச்சினையில முடிச்சுப் போட்டு இந்திய அரசை தமிழரிடமிருந்து தூர விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் சைமன்.
விழுந்து விழுந்து விடுதலைக்காக உழைப்பது போன்று காண்பித்துப பணம் தேடும் சீமான் விபரீதத்தைத் தொடுத்துவிட்டுள்ளார் ஈழத் தமிழர்களுடன்.
வெளிநாடு வாழ் பைனான்சியர்களுக்கு (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) இதன் விபரீதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஈழப்பிரச்சினையில் உண்மையான வரலாறே இவர்களில் பலருக்குத் தெரியாது. அப்படியிருக்கையில் காஸ்மீர் பிரச்சினையின் பின்னணியும் ஈழத் தமிழ் இனத்தின் பின்னணியும் எப்படித் தெரிந்திருக்கப் போகிறது!
பணத்தை அள்ளி வீசினால் தமிழ் நாட்டில் பணி செய்ய பலர் காத்திருக்கின்றனர் என்று கண்டு பிடித்துள்ளனர் வெளிநாட்டு ஈழத் தமிழர்கள். நன்றாகக் குரைக்கிறவருக்கு அதிக பணம் அனுப்பிவைக்கின்றனர். குறைப்பதுடன் நிற்காமல் காஸ்மீர் காலைக் கடித்து இழுத்து வந்து விட்டார் சீமான்.
பாதிப்பு சீமானுக்குக் கிடையாது மாறாக ஈழத் தமிழர்களுக்குத்தான்! நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் ஜாசின் மாலிக்கை அழைத்து வந்து, தமிழ் நாட்டைத் துண்டாடுவேன் என்று கூறியிருந்தால் துணிந்த தலைவன்தான் என்று போற்றலாம். அவரோ ஈழத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி இழுத்து வந்து சந்தேகத்தையும் விளைவுகளையும் ஈழத் தமிழர் தலையில் கட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் ஈழவிடுதலை விரும்பிகள் தங்களது பணத்தைக் கொண்டு தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கணிப்பது தவறானதாகும். இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்துவதன் மூலம் எங்கள் இனத்துக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்று யாராவது சொன்னால் அது உண்மைக்குப் புறம்பானதாகும்.
இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிகள், திட்டங்கள் வேறு உள்ளன. எதிர்ப்பை வளர்த்து, சந்தேகங்களை வளர்த்து, உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, வேறு இனப்பிரச்சினையை இழுத்து வந்து எங்கள் தலையில் கட்டி போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லாமல் தடைகள் தாண்டுவதையே தலையெழுத்தாக மாறிவிடக் கூடாது.
கடந்த காலங்களில் இதனைத்தான் புலிகளின் ஆதரவாளர்கள் செய்தனர். நட்புக் கொள்ள வேண்டியவர்களைப் பகைப்பதும், பகைக்க வேண்டியவர்களுடன் நட்புக் கொள்வதும் பின்னர் அதற்கு ராஜதந்திரம் என்று பொய் விளக்கம் கொடுப்பதும் வரலாறாக இருந்து வந்தது.
தயவுசெய்து சீமான் போன்ற நபர்களுக்குப் பணம் அனுப்பி ஈழத்துக்குப் பாதை அமைக்கும் பணியினைச் செய்ய வேண்டாம் என்று ஈழத் தமிழர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். விலை கொடுத்து விடுதலை வாங்க முடியாது. பணத்துக்காக நடிப்பவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். அதிலும் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் பணத்தை மையமாகக் கொண்டவை. வெளிநாட்டு ஈழத் தமிழரது பணம் சிலர் வளமுடன் வாழ பயன்படுமே தவிர விடுதலைக்கு இதுவரையில் எந்தப் பயனையும் தந்தது கிடையாது.
தெரிந்து கொண்டால், விளங்கிக் கொண்டால் ஈழத் தமிழருக்கு நன்மை கிட்டும். கூலி கொடுத்து விடுதலைக்கு ஆள்பிடிக்க வேண்டாம். கூலிக்கேற்ற வேலை என்று நினைத்து வினையை விதைத்துக்கொண்டிருக்கிறார் அந்தக் கூலியாள்.
நன்றியுடன்,
ஈழப் பித்தன்.

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: நாராயணசாமி

Narayansamyபுதுவையில் ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். அவருடைய காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் கொள்கை, அறிவியல் கொள்கை ஆகியவை கொண்டு வரப்பட்டது. 
ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம். 
தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கக் கூடிய ஒரு கூட்டம் தமிழகத்திலும், புதுவையிலும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவரின் புகைப் படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கேட்டார். ஆனால் அந்த கூட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இது நியாயமான சரியான நடவடிக்கை. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு கோழை. அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் போரில் கேடயமாக பயன்படுத்தியவர் வீரனா? இலங்கைக்கு ராஜிவ் காந்தி சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அதிலிருந்து அவர் உயிர்பிழைத்தார். வெற்றியோ, தோழ்வியோ போரை முன்னின்று நடத்தி செல்பவர்தான் வீரன், பதுங்கி கொண்டவர்கள் வீரன் அல்ல. 
சீமான் கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும் தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாம் தீவிரதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள தூக்கி எறிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

.ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டனவா?.இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம்?இன அழிப்பு முயற்சியா?;செய்தி இலங்கையில் ‘துக்ளக்

mangulam
ர்களின் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றப்படுகின்றன என்பது புலி ஆதரவாளர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது குறித்து ஒரு பட்டியலையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இது பற்றி நாங்கள் அங்குள்ள சிலரிடம் விசாரித்தோம். “இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல ஊர்களுக்கு சிங்களத்திலும் பெயர்கள் உண்டு. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந்த ஊர்ப் பலகைகள் எல்லாம் தமிழில் மட்டுமே இருந்தன. தற்போது அரசாங்கம் எல்லா ஊர்களின் பெயரையும் ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழிகளில் எழுதியுள்ளது.
“உதாரணமாக தமிழில் ‘ஆனையிரவு’ என்று சொல்லப்படும் ஊருக்கு ஆங்கிலத்தில் 'Elephant pass என்றும், சிங்களத்தில் ‘அலிமாண்டுகடுவா’ என்றும் பெயர் உண்டு. எல்லாவற்றிற்குமே ‘யானைகள் கடக்கும் இடம்’ என்றுதான் அர்த்தம். எனவே, மும்மொழிப் பெயர்களையும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்களே தவிர, தமிழ்ப் பெயர்களை எல்லாம் அழித்து விட்டார்கள் என்பது கொஞ்சம் கூட உண்மையல்ல. ஒரு சில இடங்களில் மட்டும் புலிகள், தங்களது மாவீரர்கள் பெயரைச் சில நகர்களுக்கும், தெருக்களுக்கும் சூட்டியிருந்தனர். அந்தப் பெயர்கள் மட்டுமே முழுமையாக நீக்கப்பட்டுள்ளன” என்றார்கள் சிலர். நாங்கள் பார்த்த ஊர்களின் பெயர்ப் பலகைகள் எல்லாம் மூன்று மொழிகளிலும் காணப்பட்டன.
கட்டம் இடப்பட்ட செய்தி 2
.இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம்?
‘சீனர்கள் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாகி விட்டது?’ என்ற வதந்தி இந்தியாவில் நிலவுகிறது. இலங்கையில் ஆறு நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி என்று பல நகரங்களில் சுற்றினோம். மருந்துக்குக் கூட ஒரு சீனர் எங்கள் கண்ணில் படவில்லை. இது பற்றிக் கொழும்புவில் சிலரிடம் விசாரித்தோம். “மத்திய இலங்கையையும் வட இலங்கையையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே வேலையைச் சீன அரசாங்கம் செய்து கொடுக்கிறது. அங்கு போனால் அந்த வேலையில் ஈடுபடும் சீனர்களைக் காணலாம்” என்றார்கள். ஆக, சீன அரசாங்கத்தின் மறைமுக ஆளுமை இலங்கையில் இருக்கக் கூடும். ஆனால், நேரடியாகச் சீனர்களின் பங்களிப்பு இந்த அளவுக்குத்தான் இருப்பதாகத் தெரிகிறது.
கட்டம் இடப்பட்ட செய்தி 3
இன அழிப்பு முயற்சியா?
இலங்கையில் தமிழின அழிப்பு முயற்சி நடந்ததாகத் தமிழகத்தில் பலமான குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அது பற்றி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர் ஒருவர் கருத்துக் கூறினார். “இங்கு நடப்பது எதையும் அறியாத தமிழக அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் திட்டமிட்டுப் பரப்பும் வதந்திகளை எல்லாம் அப்படியே நம்புகிறார்கள். இன அழிப்பு என்றால் சரணடைந்த 12 ஆயிரம் புலிகளை ராணுவம் கொன்றிருக்கலாம். கிழக்கு மாகாணமும், யாழ்ப்பாணமும் எப்போதோ புலிகள் வசமிருந்து ராணுவத்தின் வசம் வந்துவிட்டன. அங்கெல்லாம் தமிழர்களை ராணுவம் கொன்று போட்டிருக்கலாம். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. இறுதிக் கட்டப் போரின்போது சுமார் 3 லட்சம் தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களை எல்லாம் ராணுவம் கொன்று அழித்து விடவில்லை. புலிகளோடு நடந்த யுத்தத்தில், அவர்கள் அரணாக நிறுத்தி வைத்த பொதுமக்களில் பலர் இறந்ததைத் தவிர, ராணுவம் பிற பகுதி தமிழர்கள் யாரையும் வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கவில்லை. பிறகு எப்படி இது இன அழிப்பாகும்?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.Tamilcivians in warzone
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் வவுனியா மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.... விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விரும்பி இருந்தவர்களும் சரி, வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும் சரி, போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்டுகளுக்கு சிவிலியன்களோடு சிவிலியன்களாக வந்து சரண்டர் ஆனார்கள். ஆனால், ராணுவத்தினர் அந்தப் புலிகளை அடையாளம் கண்டுபிடித்து பிரித்தெடுக்க உதவியது யார் தெரியுமா?
சரணடைந்த மக்கள் கூட்டத்தை நோக்கி, “ஒரு மணி நேரம் புலிகள் இயக்கத்தில் பணிபுரிந்திருந்தாலும் அவர்கள் தனியே வந்து விடுங்கள். விசாரணைக்குப் பிறகு விடுவித்து விடுவோம்” என்று ராணுவம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் கடைசி நேரத்தில் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர், இளம்பெண்கள் எழுந்து உண்மையை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளனர்.
ஆனால், பல ஆண்டுகள் இயக்கத்தில் இருந்தவர்கள் ஒப்புக் கொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளனர். அந்த நிலையில் பொதுமக்களே எழுந்து, ‘இதோ இவன்தான் என் மகனை இயக்கத்துக்குத் தூக்கிக் கொண்டு போனவன். அதோ அவன்தான் என் மகளை இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போனவன்’ என்று சரமாரியாகக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் அந்தத் தமிழ் மக்கள், புலிகள் மீது எவ்வளவு கோபத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது மிகப் பெரிய சான்று. வலுக்கட்டாயமாக இயக்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களும், தங்கள் பங்குக்குச் சக புலிகளைக் கணிசமாகக் காட்டிக் கொடுத்துள்ளனர்.
சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் இவ்விதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரம் பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது வவுனியாவிலுள்ள முன்னாள் புலிகளின் மறுவாழ்வு மையத்தில் இருப்பது சுமார் 350 பேர் மட்டுமே. பெண்கள் மையத்தில் சுமார் 20 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த மறுவாழ்வு மையத்தில் இவர்களுக்கு ஒரு வருடத்தில் ஆங்கிலம், சிங்களம், கம்ப்யூட்டர் மற்றும் விருப்பமான தொழில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதன்பின் விடுவிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்ததால், வவுனியாவslarm hindutempleில் உள்ள அந்தப் பெண்கள் மறுவாழ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். நுழைந்ததுமே நம்மை வரவேற்றது, சின்ன குடிசை சைஸிலிருந்த ஒரு பத்ரகாளியம்மன் கோவில். ஹிந்துக் கோவில்களை ராணுவம் இடிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு நடுவே, ராணுவ முகாமிற்குள்ளேயே ஹிந்துக் கோவில் இருந்தது எங்களை வியப்படைய வைத்தது. (ராணுவம் இந்தக் கோவிலை அனுமதித்தது மட்டுமல்ல; அந்தக் கோவிலை அவர்களும் வணங்குவது உண்டு - என்று எங்களிடம் தெரிவித்தனர் அங்கிருந்த முன்னாள் பெண் புலிகள்.)
அந்த முகாமில் இருந்த முன்னாள் பெண் புலிகள், ஒரு வித சலிப்புடனே எங்கள் முன் வந்து அமர்ந்தனர். நாங்கள் தமிழகப் பத்திரிகையாளர்கள் என்று தெரிந்த பிறகு, முக மலர்ச்சியோடு பேச ஆரம்பித்தனர். “நான்கு வருடங்களாக விசாரிப்பு, விசாரிப்பு என்று, கேட்டதையே பலமுறை கேட்டு எங்களுக்குப் போரடித்து விட்டது. இங்கு மறுவாழ்வு மையம் வந்த பிறகுதான், தற்போது நிம்மதியாக இருக்கிறோம். இப்போது, மறுபடி யாரோ சந்திக்க வருகிறார்கள் என்றதும், விசாரணைக்குத்தான் வருகிறார்களோ என்று சலித்துப் போனோம். நல்லவேளை இது நீங்களாக இருக்கிறீர்கள்” என்று அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
இதனாலேயே அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்காமல், அவர்கள் போக்கிலேயே பேச விட்டோம். “தமிழகத்தில் மாணவர்கள் போராடுவதைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் போராடியிருந்தால் ஏதாவது பலன் இருந்திருக்கும். இப்போது காலம் கடந்து, எல்லாம் முடிந்த பிறகு போராடி என்ன பயன்?” என்றார்கள் சலிப்போடு.
அந்தப் பெண்களில், ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கத்தில் இருந்த பெண்கள் நாலைந்து பேரை மட்டும் தேர்வு செய்து தனியே பேசினோம். “இயக்கத்தில் விரும்பித் தான் சேர்ந்தோம்” என்றார்கள்.
“தனி நாடு கிடைக்கும்; அங்கு நிம்மதியாக வாழலாம் என ஆசைப்பட்டு, புலிகளின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்தோம். முழுப் பயிற்சி எடுத்து சயனைட் குப்பிகளும் மாட்டிக் கொண்டுதான் இயக்கத்தில் இருந்தோம். ஆனால், ஜெயிக்க முடியாது; தோற்று போவோம் என்பது தெரியத் தெரிய எங்களுக்கு ஆர்வம் குறைந்தது. அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் அதிகமானபோது, எங்கள் மனதில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. எங்களது படைகள் பின்வாங்கப் பின்வாங்க நாங்கள் உறவினர்களோடு நெருங்க ஆரம்பித்தோம். அவர்களும் ‘இனி வெல்ல முடியாது; எங்களோடு வெளியே வந்து விடு’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ‘புலிகளும் சரண் அடையலாம். கொல்ல மாட்டோம்’ என்று ராணுவம் அறிவித்ததை நம்பி சரணடைந்தோம். அதனால் இன்று உயிரோடு இருக்கிறோம்” என்றார்கள் அவர்கள்.
“தடுப்புக் காவல், சிறை என்று ஓரிரு வருடங்கள் துன்பம் அனுபவித்தாலும், இப்போது நிம்மதியாக இருக்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியே சென்று விடுவோம். அதன் பின் சுதந்திரமாக வாழ்வோம்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
“நாங்கள் சரணடையச் செல்லும் முன், ‘எங்களைக் கொன்று விடுவார்கள்; பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்கள்’ என்றெல்லாம் ஒருவித அச்சம் எங்கள் மனதில் இருந்தது. ஆனாலும், வேறு வழியில்லாமல் சரணடைந்தோம். ஆனால், அந்த மாதிரி எந்த கெட்ட சம்பவங்களும் எங்களுக்கு நடக்கவில்லை. இங்கே நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் பிறந்த நாளை ராணுவத்தினரே கொண்டாடுகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், தமிழ் வருடப் பிறப்பு போன்ற எல்லா பண்டிகைகளையும் கொண்டாட இங்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். அன்றைய தினங்களில் எங்கள் உறவினர்களை இங்கு வரவழைத்து, அவர்களும் எங்களோடு உணவருந்தி மகிழ அனுமதிக்கிறார்கள். உண்மையில் நாங்கள் இங்கு நிம்மதியாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.formerlttecadres
அப்படி கூறிய அவர்கள், ஓடிப் போய், அது குறித்த ஃபோட்டோ ஆல்பத்தையும் எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ஒரு முன்னாள் பெண் புலிக்கு, ராணுவமே திருமணம் செய்து வைத்துள்ளது. அங்கிருந்த ஒரு பெண்ணின் சிறு வயது மகனும், அப்பெண்ணுடனே முகாமில் தங்கியுள்ளான். அவனை ராணுவமே படிக்க வைக்கிறது. அந்தக் குழந்தை, அங்குள்ள பெண் ராணுவ அதிகாரிகளுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக திகழ்கிறான். அவனது பெயர் சூட்டு விழாவையும் ராணுவமே தமிழர் மற்றும் ஹிந்து முறைப்படி நடத்தி வைத்துள்ளது.
‘தமிழீழம் கிடைக்காமல் போனதில் வருத்தமா?’ என்ற கேள்வியையும் அந்த முன்னாள் புலிகளிடம் நாங்கள் வைத்தோம். “வருத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்? ஆனால், ஈழம் கிடைக்கவில்லை என்பதற்காக இங்குள்ள தமிழினமே அழிந்து போக வேண்டும் என்று நினைக்க முடியுமா? எத்தனையோ விஷயங்களுக்கு வாழ்க்கையில் ஆசைப்படுகிறோம். அவை கிடைக்கவில்லை என்பதற்காக உடனே உயிரையா விடுகிறோம்? ஏமாற்றத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதில்லையா? அப்படித்தான் இதுவும். பலரின் வாழ்க்கையையும், உடல் அங்கங்களையும், மன நிம்மதியையும் இழக்கச் செய்தது போதும். திரும்ப தமிழீழம் என்று ஆரம்பித்துக் குழப்பங்களை உருவாக்கக் கூடாது. அது முடிந்து போன கதை. இனி சாத்தியமில்லாத விஷயம்” என்றார்கள் உறுதி கலந்த குரலில்.
சிறுவர், சிறுமியரை புலிகள் வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்று இயக்கத்தில் சேர்த்தது பற்றி அவர்களிடம் கேட்டோம். இயக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பெண் (பெயர் நீக்கப்பட்டுள்ளது.) அது குறித்துப் பேசினார். “நான் சேர்ந்த காலத்தில் எல்லாம் இளைஞர்கள் இயக்கத்தில் விரும்பி வந்து சேர்ந்தனர். இயக்கத்தினர், ‘வீட்டுக்கு ஒரு பிள்ளையை இயக்கத்துக்குக் கொடுங்கள்’ என்று வேண்டுகோளாக பிரச்சாரம் செய்வார்கள். வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல மாட்டார்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ என்பதைக் கட்டாயமாக்கினார்கள்.
“2004-க்குப் பிறகு, தோல்விகள் தொடரத் தொடர கண்ணில் பட்ட எல்லா சிறார்களையும் இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போகும் நிலை ஏற்பட்டது. தாய்மார்கள் அழுது கொண்டே பின்னால் ஓடி வருவார்கள். மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். ‘உன் பிள்ளையைப் போர் முனைக்கு அனுப்ப மாட்டோம். மற்ற வேலைக்குத்தான் வைத்துக் கொள்வோம் போ’ என்று அந்தத் தாய்மார்கள் துரத்தப்படுவார்கள். பாவமாக இருக்கும். சிலர் மண்ணை அள்ளித் தூற்றி விட்டுக் கூடப் போவார்கள்” என்று பேசிக் கொண்டே போனவர், திடீரென உடைந்து கண் கலங்கியபடி “மறக்க விரும்புகிறேன்... எல்லாவற்றையும் மறக்க விரும்புகிறேன். மன்னியுங்கள்” என்று தலையை கவிழ்த்துக் கொண்டார்.
formerltte cadrs-1அவரை ஆறுதல்படுத்தி புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி அவரை தைரியப்படுத்தினோம். அதன்பின் அவரிடம் நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ‘அரசியல் ரீதியான தீர்வுக்காகப் பல வாய்ப்புகள் வந்தபோதும், புலிகள் இயக்கம் அதை நழுவ விட்டதே... அப்போதெல்லாம் அது தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?’ என்று மற்றவர்களிடம் கேட்டோம். “இது சரி, இது தவறு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் எங்களுக்கும், தலைமைக்கும் தொடர்புகள் கிடையாது. எங்களுக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதைச் செய்வோம். அவ்வளவுதான். இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில், எங்களுடன் இருந்த தமிழ் மக்களே எங்களை வெறுத்துத் தூற்ற ஆரம்பித்தபோதுதான், தலைமையின் உத்தரவுகளுக்கு முரண்பட ஆரம்பித்தோம். நாங்களே எங்களுக்குள் பேசி வைத்து ராணுவத்திடம் சரணடைந்து விட்டோம்” என்றார்கள் அவர்கள்.
இறுதிக் கட்டப் போரின்போது, புலிகளைப் பொதுமக்களே தூற்றினார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், புதுக்குடியிருப்பு நகரில் நாங்கள் சந்தித்த இளைஞர் ஒருவர் புலிகள் மீது அப்படி ஒரு கோபத்தோடு எங்களிடம் பேசினார். “என் வயதில் நீங்கள் ஒரு இளைஞனை இங்கு சந்தித்தால், அவன் போர் நேரத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிப் போனவனாகவோ, அல்லது வெளிமாகாணங்களுக்குத் தப்பிப் போனவனாகவோதான் இருப்பான். இங்கு இருந்திருந்தால் அவன் இயக்கத்திற்கு இழுக்கப்பட்டு போருக்குப் பலி கொடுக்கப்பட்டிருப்பான். நான் தப்பிப் பிழைத்தது பேரதிசயம். என்னை நான்கு முறை இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள். ஒவ்வொரு முறையும் தப்பி வந்தேன். தப்பி வந்தால் என் வீட்டுக்குப் போக முடியாது. எங்காவது ஒரு வீட்டில் பதுங்கி இருப்பேன். சாப்பிடக் கூடப் பணம் இருக்காது. இதனால் திருடனானேன். களவாடித்தான் பல நேரம் பசியாறினேன். திரும்ப வேறு ஊரில் என்னைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
“இயக்கத்திலிருந்து தப்பி ஓடியவன் என்று அடையாளம் தெரிவதற்காக, எனக்கு மொட்டை போட்டு விட்டார்கள். அப்படியும் தப்பிப் போனேன். புலிகள் முகாமில் பல சிறார்கள் அழுதபடி கிடப்பார்கள். அவர்களிடம் எல்லாம் பேரம் பேசினேன். ‘உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டால் எனக்குப் பணம் பெற்றுத் தர வேண்டும். உன் வீட்டில் எனக்கும் அடைக்கலம் தர வேண்டும்’ என்றெல்லாம் பேரம் பேசி அவர்களையும் என்னுடன் அழைத்துக் கொண்டு தப்பிப் போயிருக்கிறேன். அதேபோல், சில வீடுகளில் பணமும் பெற்றேன். சில வீடுகளில் அடைக்கலமும் அடைந்தேன். ‘எல்லோரையும் கொன்னுட்டுத் தனி நாடு வாங்கி யாரைக் குடியமர்த்தப் போகிறீர்கள்’ என்று கோபத்தில் புலிகளிடம் கேள்விகள் கேட்டு, அவர்களிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன்.
“சுதந்திராபுரத்தில் ரிஸீவிங் பாயின்ட் அமைக்கப்பட்டு ‘நோ ஃபயரிங் ஸோன்’ என்று ராணுவம் அறிவித்ததும், மக்கள் சந்தோஷத்தோடு புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து கூட்டமாக வெளியேறினார்கள். நானும் அவர்களோடு போனேன். வரிசையாக எல்லோரும் போய்க் கொண்டிருந்தபோது, எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மக்களிடையே ஒரு பெண் புலி, மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறினார். அந்த வெடியில் பொதுமக்கள் பலர் அங்கேயே விழுந்து மடிந்தனர். பலர் உடல் உறுப்புகளை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். நல்லவேளையாக எனக்கு எதுவும் ஆகவில்லை. கீழே விழுந்ததோடு சரி, விழுந்த எல்லோரும் எழுந்து பின்புறமாக ஓடினோம். அப்போது எதிர்த்து வந்தது ஒரு மோட்டார் சைக்கிள். திடீரென அந்த மோட்டார் சைக்கிளும் அந்த ஆண்புலியோடு வெடித்து சிதறியது. மேலும் பலர் செத்தார்கள். மேலும் பலர் உடல் உறுப்புகளை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்கள். இதில்தான் எனக்கு முதுகுபுறத்தில் காயங்கள் ஏற்பட்டன. அந்த இரு மனித குண்டுகள் வெடித்ததும், ராணுவம் பின்வாங்கிப் போய் விட்டது. விடுதலைக்காக ஆசையுடன் சென்ற நாங்களும் பழையபடி புலிகளின் எல்லைக்குள்ளேயே திரும்பி வர வேண்டியதாயிற்று.
“அப்புறம் மற்றொரு கட்டத்தில்தான் நான் ரிஸீவிங் பாயின்டுக்கு தப்பி வந்தேன். நான் ஒரு தமிழன். நான் சொல்கிறேன்... இலங்கை ராணுவத்தை விடப் பல மடங்கு கொடியவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் தலைமையில் ஒரு நாடு அமைந்திருந்தால், அது சுடுகாடாகத்தான் தமிழர்களுக்கு இருந்திருக்கும். இரக்கமற்ற படுபாவிகள் அவர்கள்” என்று ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, நாங்கள் சந்தித்தது தற்செயலாகத்தான். புதுக்குடியிருப்பு நகரத்தில் ஒரு சின்ன ஜவுளிக் கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்த இரு பெண்களிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று நாங்கள் சென்றபோது, அதே கடை வாசலில் பைக்கில் வந்து இறங்கினார் அந்த இளைஞர். சுமார் 25 வயது இளைஞர் என்பதால், அவர் தமிழீழத்துக்கு ஆதரவாக பேசக்கூடும். அவரது கருத்தையும் கேட்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஆனால், அந்த இளைஞரோ கொட்டித் தீர்த்து விட்டார்.
“நான் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஐடியாவில் இருக்கிறேன். ஆனால், புலிகள் மனித வெடி குண்டாக வெடித்தபோது, என் முதுகின் மேற்புறத்தில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இன்னமும் இருக்கின்றன. வெளிநாடு செல்லும்போது, நான் இலங்கைத் தமிழர் என்று யாராவது சந்தேகப்பட்டு என்னைச் சோதனையிட்டால், இந்த வெடிக்காயங்களைப் பார்த்து, என்னை விடுதலைப் புலி என்று நினைக்கக் கூடும். எனவே, அந்தப் பகுதியில் பச்சை குத்தியிருக்கிறேன் பாருங்கள்” என்றபடி எங்கள் காருக்குள் வந்து சட்டையைக் கழட்டி முதுகை காட்டினார் அந்த இளைஞர். (அவரது எதிர்கால நலன் கருதி, நாங்களே அவரது பெயரையும் முகத்தையும் தவிர்த்துள்ளோம்.)
நாங்கள் கிளம்பும்போது, “நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். நான் சொன்னதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நான் சொன்னதை நீங்கள் எழுதுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனாலும்... என்ற ஊரில் ஒரு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு..... என்ற பெயரில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் இருக்கிறார். அவரது குடும்பத்தை மட்டும் தவிர்க்காமல் சந்தித்து விட்டுப் போங்கள்” என்று கூறி வழியனுப்பி வைத்தார் அந்த இளைஞர்.
உடனே அந்தக் குடும்பத்திடம் அப்படி என்ன தகவல் இருக்கிறது என்பதை அறியும் ஆசை எங்களுக்குள் எழுந்தது. அந்த ஊரை நோக்கி காரைச் செலுத்தச் சொன்னோம்.
(தொடரும்)

எச்சர்க்கை ரஜிவ்காந்தி ஒப்பந்தமாண 13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்ய அதிகாரம் அரசுக்கு கிடையாது; வாசுதேவ .மற்றும் திஸ்ஸ விதாரண

அரசில் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.இந்த டொர்னேடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர்.
மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர்,
இது ஒரு பேரழிவு இயற்கைச் சீற்றம் என்று பிரகடனம் செய்துள்ள அதிபர் ஒபாமா, மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த டொர்னேடோ மணிக்கு 320 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசியுள்ளது.

dimanche 19 mai 2013

ஈழப்போரட்டத்தின் ஆரம்ப கிராமமாக திகள்ந்த‌ வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை சுவீகரிப்பு இராணுவம்


வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இராணுவம் உரிமை கோரியுள்மை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என செட்டிகுளம் கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் முகமட் அப்துல் கரிம் கரீஸ் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இராணுவம் உரிமை கோரியுள்மை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என செட்டிகுளம் கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் முகமட் அப்துல் கரிம் கரீஸ் தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் என்ற கிராமத்தில் இப் பிரதேச விவசாயிகளின் சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் இராணுவத்தினரால் உரிமை கோரப்பட்டுள்ளது.
இவ் வயல் பிரதேசம் செட்டிகுளத்தை சேர்ந்தவர்களின் பரம்பரைக் காணிகளாகும். இவ்வாறான காணிகளில் இராணுவத்தினர் ‘நோ என்றி’ எனவும் ‘இராணுவ காணி’ எனவும் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதுடன் இக் காணிகளுக்கு உரிமை கோரியும் வருகின்றனர்.
எனினும் இக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை விவசாயிகள் வைத்துள்ளனர்.
இந் நிலையில் திடீரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இராணுவத்தினரால் இவ்வாறான காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளமை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் என்ற கிராமத்தில் இப் பிரதேச விவசாயிகளின் சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் இராணுவத்தினரால் உரிமை கோரப்பட்டுள்ளது.
இவ் வயல் பிரதேசம் செட்டிகுளத்தை சேர்ந்தவர்களின் பரம்பரைக் காணிகளாகும். இவ்வாறான காணிகளில் இராணுவத்தினர் ‘நோ என்றி’ எனவும் ‘இராணுவ காணி’ எனவும் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதுடன் இக் காணிகளுக்கு உரிமை கோரியும் வருகின்றனர்.
எனினும் இக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை விவசாயிகள் வைத்துள்ளனர்.
இந் நிலையில் திடீரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இராணுவத்தினரால் இவ்வாறான காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளமை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்தார்.

இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது;கலாநிதி விக்கிரமபாகு


இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. விஜயன் கபடத்தனமாக அவனது மாமன்மாரை கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றினான். சிங்களவர்களும் 2500 வருடங்களாகவே இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. அதேபோல 200 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டுக்கு கொண்டு வந்து குடியேற்றப்பட்ட இந்திய தமிழர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது.
இராவணன் என்ற தமிழ் மன்னன் இந்த நாட்டை ஆண்டான் என்று வரலாறு கூறுகின்றது. இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இக் கூற்று மேலும் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளையே தோற்றுவிக்கும். 

கடற்படை வீரர் சடலமாக மீட்பு யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கி காணாமல் போன கடற்படை வீரரை

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் காணாமல் போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சடலம் மீட்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போனதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.

படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில்  கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பாழ்வத்தோடையில்; சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மீதப்பதற்கான காரணம் கடலின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால்தான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் பெரிய, சிறிய மீன்கள் இறந்த நிலையிலும் உயிரோடும் கரையொதிங்கியமை குறிப்பிடத்தக்கது.

சீனா விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது.:அதற்கு அமெரிக்கா கண்டனம்


சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது.
ஆனால் இது செயற்கை கோளை வழிமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. விண்ணில் ராக்கெட் செலுத்தியது ராணுவ வளர்ச்சிக்கு தான் என்று தெரிவித்தது.
ஆனால் இது குறித்து சீனாவில் தேசிய விண்வெளி மைய அதிகாரிகள் கூறுகையில், பூமியின் மேற்பரப்பில் பாறை அடுக்குகளில் உள்ள சக்தி வாய்ந்த துகள்கள் மற்றும் காந்த வயல்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது போன்ற மாறுபட்ட கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை சவுதி பெண்!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவுதி அரேபியா பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். ராஹா முஹாராக் எனப்படும் 25 வயதான பெண்ணே நேபாளத்திலுள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து , தனது இலக்கை நிறைவுசெய்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து, அந்நாட்டிலிருந்து முதலாவது பெண், சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளமைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ராஹா, எவரெஸ்ட் சிகரத்துடன், உலகின் 7 மலைச்சிகரங்களை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தனது சாதனையால், தனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், சிறந்த கௌரவத்தை வழங்கியுள்ளதாக ராஹா கருத்து வெளியிட்டுள்ளார்.

ராஹாவுடன், மேலும் 3 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக பீ பீ சீ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை அண்மையில் சவுதியில் பெண்கள் , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

samedi 18 mai 2013

ராஜிவ் நினைவு நாள் ஜோதி ஊர்வலம்

அரியலூர்: அரியலூர் காமராஜர் திடலில் இருந்து, 19 ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கி, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் ராஜீவ்காந்தி நினைவு நாள் ஜோதி ஊர்வல துவக்க விழாவுக்கு, மணிரத்தினம் தலைமை வகிக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுசெயலாளரும், முன்னாள் நகராட்சி துணை தலைவருமான சுப்ரமணியன் வரவேற்று பேசுகிறார்.ராஜீவ்காந்தி நினைவு நாள் ஜோதி ஊர்வலத்தை, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாளை அமரமூர்த்தி துவக்கி வைக்கிறார். துவக்க விழாவில் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிந்தராசு, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் கல்யாணசுந்தரம், குமார், கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இளைஞர் காங்., பொதுசெயலாளர் தேவர் நன்றி கூறுகிறார்.

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை.

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்றுவியாழக்கழமை இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும் போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.

வெற்றி விழா கொண்டாட்டம்: கடற்படை படகு மூழ்கியது?


யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி பலம் இந்தியா, சீனாவை நோக்கி நகரும்: உலக வங்கி


உலக வங்கியின் புதிய தலைவர் ஜிம் யாங்
உலகத்தில் முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் இருபது சதவீதத்தை தற்சமயம் ஈர்த்து வருகின்ற வளர்ந்துவரும் நாடுகள் மூன்று மடங்காக அதிகரித்து 60 சதவீதத்தை ஈர்க்கும் நாள் வரும் என்று புதிய அறிக்கை ஒன்றில் உலக வங்கி கூறுகிறது.
சீனாவும் இந்தியாவும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியமான சக்திகளாக விளங்குவர் என்று அது தெரிவித்துள்ளது.
சுகாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற்றங்கள் ஏற்படுவதாலும், தகவல் தொழில்நுட்பம் பரவி வருவதாலும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
ஏழை மக்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்று அது கூறுகிறது.
ஆனால் 2030 ஆண்டு வாக்கில் பார்க்கையிலும் செல்வந்த நாடுகளில் உள்ள மக்களின் சராசரி வருமானத்தில் இருபது சதவீதம்தான் வளர்ந்துவரும் நாடுகளுடைய மக்களின் சராசரி வருமானமாக இருக்கும் என்று அது கணித்துள்ளது.
தற்சமயம் செல்வந்த நாடுகளின் சராசரி தனி மனித வருமானத்தில் பத்து சதவீதமே வளர்ந்துவரும் நாடுகளில் மக்களின் சராசரி வருமானமாக உள்ளது.

லொறி கவிழ்ந்து செட்டிக்குளத்தில் இராணுவ கொப்ரால் பலி 18 சிப்பாய்கள் படுகாயம்


mannar chettikulamமன்னார் - செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கொப்ரால் உயிரிழந்ததோடு 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (17ம் திகதி) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 சிப்பாய்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் 2 சிப்பாய்கள் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த சிவிலியன் எனவும் இராணுவத்தினரால் வாடகைக்கு குறித்த லொறி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மாணவி கற்பழித்து கொலை ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 ஆண்டு ஜெயில் தண்டனை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


toshatakker
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் மேற்குப்பகுதியிலுள்ள கரோய்டான் என்ற இடத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகளான கல்லூரி மாணவி தோஷா தாக்கர்(19) கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பக்கத்து வீட்டில் வசித்த வாலிபரால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலைகாரன் அவளுடைய பிணத்தை மூட்டையில் அடைத்து காரில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசி விட்டான். இந்த கொலை தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் ஸ்டானி(24) என்ற வாலிபரை கைது செய்தனர். இவன் மாணவி தோஷாவுடன் படித்தவன். இந்த கொலை வழக்கை நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டெரீக் பிரின்ஸ் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட டேனியல் ஸ்டானிக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அது மட்டுமின்றி அவனை குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு பரோலில் வெளியே செல்ல அனுமதிக்கூடாது என்றும் உத்தாவிட்டார். எனவே அவன் 2041–ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் வெளியே வர முடியாது. சிறையிலேயே அவன் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதி அதிகாரங்களை பறிக்கக் கூடாது இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித்,

kurshidஇலங்கையில் தமிழர் பகுதி மாகாண கவுன்சிங் அதிகாரங்களை பறிக்கக்கூடாது என்று, இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போருக்குப்பின்னர் தமிழர்களுடன் சமரச நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழர் பகுதியில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்சே தலைமையிலான ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் வேட்பாளர்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது.
மாகாண கவுன்சில் கலைப்பு?
இந்த நிலையில், இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஜே.எச்.யு. என்று அழைக்கப்படும் ஹெரிடேஜ் கட்சி, இந்த தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் மாகாண கவுன்சில்களை கலைப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளது. மேலும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13–வது சட்ட திருத்தத்தை ரத்து செய்யும்படி அடுத்த இரண்டு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவோம் என்று, அந்த கட்சியின் துணைச் செயலாளரான உதய கம்மன்பிலா அறிவித்து இருக்கிறார்.
ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தின்போது இந்திய – இலங்கை இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கையில் மாகாண கவுன்சிங்கள் மற்றும் தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக 13–வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்டு உள்ள போலீஸ் அதிகாரத்தை பறிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராணுவ உயர் பாதுகாப்பு மண்டலம் என்ற பெயரில் முக்கிய இடங்களில் உள்ள தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா கண்டிப்பு
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கையின் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீசுடன் நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், இலங்கையில் தமிழர் பகுதி மாகாணத்தில் நிலம் பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரம் நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கினார். இதுபோன்ற நடவடிக்கைகள் போருக்கு பிந்திய படிப்பினை தொடர்பான சிபாரிசுகளுக்கு எதிரானது என்றும், குர்ஷித் சுட்டிக்காட்டினார்.
தமிழக மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய வற்புறுத்தல்
வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை மந்திரி பெரீசுடன் பேசியபோது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். மேலும் 5 மீனவர்கள் கடந்த 2012–ம் ஆண்டில் இருந்தே இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான வழக்கை மறு ஆய்வு செய்து அவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மந்திரி பெரீஸ் தெரிவித்தார்.

vendredi 17 mai 2013

தமிழ் நாட்டின் தொலைக்காட்சிக் குப்பைகளையே தமிழ்க் கலாச்சரம் என குழந்தைகளுக்கு பெற்றோர் அறிமுகம்

தென்னிந்திய சினிமாக் குப்பைகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திணிக்கும் தமிழ் நாட்டின் தொலைக்காட்சி சேவைகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் ‘புலம் பெயர் கலாச்சாரத்தை’ ஆக்கிரமித்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில் தேசியம் பேசும் வியாபாரிகளின் ஒரு பகுதியினர், விஜய், ஜெயா, சண், ராஜ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அங்கு ஒலிபரப்பும் வியாபார முகவர்களாகத் தொழிற்படுகின்றனர். தமிழ் நாட்டின் சினிமா சார்ந்த மிகப்படுத்தப்பட்ட கலாசார அழிப்பை மேற்கொள்ளும் இத்தகைய தொலைக்காட்சிகளின் குப்பைகளையே தமிழ்க் கலாச்சரம் என குழந்தைகளுக்கு பெற்றோர் அறிமுகம் செய்கின்றனர்.
போராடும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாகவன்றி சீரழிந்து சிதைந்துபோன மக்கள் கூட்டமாக ஈழத் தமிழர்களை மாற்றுவதில் தமிழ் நாட்டின் தொலைக்காட்சிக் குப்பைகளின் ஆக்கிரமிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது.
புலம் பெயர் நாடுகளில் காணப்படும் ஜனநாயக முற்போக்கு விழுமியங்களையும் உள்வாங்க்கிக்கொண்டு முன்னேறிய சமுதாயமாக ஈழத்தை மாற்றுவதற்குப் பதிலாக பல ஆண்டுகள் பிந்தங்கிய சமுதாயமாக தேய்ந்துபோவதற்கு தமிழகத்தின் கலை வியாபாரம் பங்களிக்கிறது.

40 பேருக்கு தலையை துண்டித்து மரண தன்டணை நிறைவேற்றமாம்.சவுதியில் கடந்த 4 மாதத்தில்

சவுதி அரேபியாவில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்காக மரண தன்டணை விதிக்கப்படு பவர்களுக்கு தலையை துண்டித்து மரண தன்டணை நிறைவேற்றுகின்றது சவுதி அரசு. இதற்கிணங்க இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 40 பேருக்கு மரணதன்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தலையை துண்டித்தே கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

போலிக்கு போலியா

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புங்குடுதீவைச்சேர்ந்த பெண் ஒருவரையே அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, புங்குடுதீவைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குச்   சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். வழிபாடுகளை முடித்துக்கொண்ட குறித்த பெண் தான் ஆலயத்திற்கு நகைகள் தானம் செய்வதாகக் கூறி தான கொண்டு வந்த நகைகளை ஆலய நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். தான் தானமாக கொடுத்த நகைகளின் பெறுமதி 2 இலட்சம் ரூபா என்றும் தெரிவித்ததுடன் அந்த பெறுமதிக்கான பற்றுச்சீட்டினையும் வாங்கிக்கொண்டுள்ளார். தானமாக கொடுத்த நகைகள் மீதும் அந்த பெண்ணின் நடவடிக்கையின் மீதும் சந்தேகம் கொண்ட ஆலய நிர்வாக சபையினர் நகைகளைச் சோதனை செய்த போது, அது போலி நகைகள் என்பது தெரியவந்தது. இந்த போலி நகைகள் தொடர்பில் குறித்த பெண்ணிடம் நிர்வாகத்தினர் விசாரித்த போது ஆலய நிர்வாக சபையினரை தகாத வார்த்தைகளினால் குறித்த பெண் ஏசியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தினால் ஆலய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களும் சில மணிநேரம் பதற்றமடைந்தனர்.

எச்சரிக்கை மனிதஉரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால்?

மனிதஉரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும் போது, சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் எச்சரித்துள்ளார். 

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் சார்பாகப் பதிலளித்த போதே, துணைப் பிரதமர் நிக் கிளெக் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய, லிபரல் ஜனநாயகக் கட்சியின் துணைத்தலைவரான சைமன் ஹியூஸ், சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரங்களின்படி, அங்கு நடக்கும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரித்தானியப் பிரதமரின் முடிவை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்தார். 

அத்துடன் சிறிலங்காவின் மோசமான ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கொமன்வெல்த் அமைப்பு தாம் மனிதஉரிமைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று வெறுமனே கூறாது, மனிதஉரிமைகளுக்காக என்ன செய்தோம் என்பதைக் கூறுவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் பிரித்தானியப் பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்குப் பதிலளித்த அதே கட்சியின் தலைவரும், துணைப் பிரதமருமான நிக் கிளெக், அண்மைய போரின் போது மனிதஉரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் முடிவு சர்ச்சைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் பணியகப் பேச்சாளர் ஒருவர், பிரதமர் டேவிட் கெமரூன் நிச்சயமாக சிறிலங்கா மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார். 

சிறிலங்கா மனிதஉரிமை விவகாரங்களை உரிய வகையில் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும், அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.